மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது

நன்றி -ARV

​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தகவைக் படுகொலை செய்யத் தயாராக இருந்தபோது மகரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் இன்று (02) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், அரச நிறுவனமொன்றில் ஊழியராக கடமையாற்றும் சந்தேகநபர், பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தார பத்மவின் ஆலோசனைக்கமைய இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

​சந்தேகநபரிடமிருந்து ரிவோல்வர் துப்பாக்கி மற்றும் சேதப்படுத்தப்பட்ட வீடியோ கெமரா என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
​சந்தேகநபருக்கு, “ஹரக் கடா” தடுத்து வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை மேற்கொள்ளும் பணி வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.