வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள சாலகோபுரத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வின் பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு வித்தியாசகாரர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
பூமி பூஜைகள் நடைபெற்றதுடன் முதல் கல்லினை பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து ஆலய குரு உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
சால கோபுரமானது 23 அடி உயரத்துடன் 20 அடி அகலமாக நிர்மானிக்கப்படவுள்ளது.
பாசுபதேசுவரர் ஆலயம் அமைக்கப்பட்டு பல நூறு வருடங்களை கடந்த நிலையில் ஆலயத்திற்கான சாலகோபுரம் அமைக்க வேண்டும் என பலரது எண்ணத்தில் இருந்தபோதிலும் அதற்குரிய காலம் கைகூடியமை தொடர்பில் ஆலய நிருவாகமும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




