கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது கல்முனை P.K. சேகர் அவர்கள் பெறுகின்றார்.

கல்முனை யாட் வீதியை சேர்ந்த கல்முனை, சாகரம் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலல்கள் திணைக்களத்தினால் தமிழ் இலக்கிய விழா- 2025 ல் இசைத்துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரான இவர் கல்முனை சிவா இசைக் குழுவில் ஆரம்ப காலத்தில் ஒரு சிறந்த பாடகராக தனது இசைப் பயணத்தை ஆரம்பித்து, 40 வருட காலமாக இப்பயணத்தில் தொடர்ச்சியாக இணைந்ததன் காரணமாக இசை துறைக்கு கிடைத்த அங்கீகாரமாக இவ்விருதை கருதுவதாக எமது கல்முனை நெற்க்கு தெரிவித்தார்.

You missed