கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 வீடுகள்!

கனடாவில் வதியும் இலங்கையின் முன்னாள் வர்த்தகர்களின் அமைப்பான கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து வழங்கப்படவுள்ளன.


இத் திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பன நிகழ்வு 20.05.2025 இன்று கனடாவில் இருந்து வருகை தந்துள்ள அமைப்பின் உறுப்பினரும், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை, கனடா விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல்.கந்தையா புருஷோத்மன் ,சமூக செயற்பாட்டாளர் வி.விஜயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கமானது கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக பல்வேறு சமூகப்ணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.