இன்று மட்டக்களப்பில் (20); வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை தங்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக வீதி அதிகார சபையில் கடமையாற்றி வருகின்றனர். தங்களை இதுவரை நிரந்தரமாக்கவில்லை. எனவே தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ விடுமுறை வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்