34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்!

கல்வித் துறையில் 34 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்வியாளர் சாந்தகுமார் அவர்கள், இன்று (10.06.2026) தனது நீண்டகால கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார்.

ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் நேசரெத்தினம் அவர்களின் புதல்வரான சாந்தகுமார் அவர்கள், 1992 ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். அங்கு 2004 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், பின்னர் கல்முனை கல்வி வலயத்தின் உளவளத்துணைச் செயற்பாடுகளில் இணைந்து பல்வேறு கல்வி மேம்பாட்டுப் பணிகளில் பங்களித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி ஆலோசகராகப் பொறுப்பேற்று, ஆரம்பக் கல்வியின் தர உயர்விற்கும் ஆசிரியர் வழிகாட்டலிற்கும் குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்கியுள்ளார். தனது பணிக்காலம் முழுவதும் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர் நலன்களுக்கும் முன்னுரிமை வழங்கிய கல்வியாளராக அவர் அறியப்படுகின்றார்.

கல்விப் பணிகளுக்கு அப்பால் சமூக, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும். நற்பட்டிமுனை கல்வி அபிவிருத்திக் கழகத்தின் உறுப்பினராகவும், நற்பட்டிமுனை அறநெறி பாடசாலை அறநெறிப் பாடசாலையின் அதிபராகவும், நற்பட்டிமுனை விவேகானந்த விளையாட்டுக் கழகத்தின் முதற்கட்ட உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும், சாலூரம், வாழ்வியம், கல்வியம் அமைப்புக்களின் உறுப்பினரகவும் கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளராகவும், கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் இருந்து இலக்கிய மற்றும் ஊடக வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

அத்துடன், நகவிதா அமைப்பின் கலை இலக்கிய வட்ட உறுப்பினராகவும், கல்வியம் அமைப்பின் செயலாளராகவும், சைவ மகா சபையின் அறநெறிப் பாடசாலை செயலாளராகவும், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும், கல்முனை பிராந்திய இணையம் கனடா – கல்முனை கிளையின் உறுப்பினராகவும் பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

சாந்தகுமார் அவர்களின் துணைவியார் சுவோஜினி ஆசிரியர் ஆவார். மகன் விதுசன் மற்றும் மருமகள் திவ்யா ஆகியோரை உள்ளடக்கிய அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

கல்வி, சமூக, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடனும் அருமையான பணியாற்றலுடனும் தடம் பதித்துள்ள சாந்தகுமார் அவர்களின் ஓய்வுபெறும் தருணத்தை முன்னிட்டு கல்விச் சமூகத்தினர், நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அவரது ஓய்வுக்கால வாழ்க்கை உடல்நலம், மனநிறைவு, நீண்ட ஆயுள் மற்றும் சமூகச் சேவையின் தொடர்ச்சியால் நிறைவுற வாழ்த்துக்களை கல்முனை நெற் குழுமம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.