17–22 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதல் கட்டமாக 300 பேரை தேர்வு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் மற்றும் விளையாட்டு காலணிகளுடன் வர வேண்டும்(காலணிகள் இல்லாதவர்களுக்கு அதனை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது) முன்பு கடின பந்து பயன்படுத்தி விளையாடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு முன்னாள் இலங்கை வேகப்பந்து கிரிக்கட் வீரர் Lasith Malinga தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். 🏏 மேலதிக தகவல்களுக்கு தொடர்ச்சியாக அவரது முகநூல் பக்கத்தினை பின் தொடரலாம்
