கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு
கிழக்கில் இடை இடையே பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாரை மாவட்டத்தின் கல்முனை கிட்டங்கி வீதியால் நீர் பாய்வதால் துரவந்திய மேடு கிராமத்துக்கு செல்வதற்கான பாதைகள் யாவும் மூடப்பட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது.
குறித்த கிராமத்திற்கு நிவாரணப்பணிகளை செய்யும் தொண்டு அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு நிவாரணப்பணிகளை செய்தால் தற்போதைய நிலையில் அம்மக்களுக்கு உதவியாக இருக்கும்.












