மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைவு
மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 #வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 15.09.2025 அன்று திங்கள் கிழமையன்று அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுஷியா அவர்கள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள், புதிய வைத்திய அதிகாரிகளுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கியிருந்தார். மேலும், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய வைத்தியர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.
இந்த புதிய வைத்தியர்களின் வருகை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என்பதில் நம்பிகை கொள்ளலாம்.





















