-சௌவியதாசன்-
அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.07.2025 இன்று திங்கட்கிழமை மட். குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இவ் அமைப்பால் நடாத்தப்படும் விபுலாநந்த முதியோர் பராமரிப்பு நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி (தலைவர் ADVRO -UK) அவர்களின் தலைமையில்சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் ஆகியோரும் ,ஏனைய அதிதிகளாக டாக்டர் திருமதி பு.லோகநாதன் ,டாக்டர் வா.ஞானரெட்ணம் ,டாக்டர் வீ.அற்புதன்) , சா.அருள்மொழி ( மா.ச.சே உத்தியோகத்தர்) , எந்திரி த.மயூரன் எந்திரி தே.சர்வானந்தன்க, அழகரெட்ணம் ( போதனாசிரியர் உ.தா.உத்தியோகத்தர்) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்விலே உதவி தாதிப் பயிற்சியை நிறைவு செய்த மூன்றாவது தொகுதி மாணவர்கள் 16 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.




















