மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை கூட்டிணைக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்று 20.06.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது,

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவ் முயற்சியின், முதற்கட்டத்தினை #மட்டக்களப்பு கல்வி வலயத்தில் செயல்படுத்தப்படுத்துவதற்கு சர்வம் பவுண்டேஷன் நிறுவனம் முன்வந்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலில், கல்வி வலயத்தின் பொறுப்பு அதிகாரி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சர்வம் பவுண்டேஷன் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதில், பாடசாலைகள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. குறிப்பாக, சுகாதாரச் சேவைகள் சார்ந்த சவால்களுக்கான தீர்வுகள் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான சர்வம் பவுண்டேஷனின் அனுசரணை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

தாய் சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. கிரிசுதன் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. அஞ்சலா அருட்பிரகாசம் அவர்களின் பிரசன்னமும் அவரது ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு வலயத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறந்த கல்விச் சூழலையும் மேம்பட்ட சுகாதார வசதிகளையும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#rdhsbatticaloa