கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த  சூ. பார்த்தீபன்   நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் முகமாக திரு பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ஜயசேகர இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.