கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் “ நூல் வெளியீட்டு விழா
( வி.ரி.சகாதேவராஜா)
நாடறிந்த கவிஞர் காரைதீவைச் சேர்ந்த அமரர் பொன்.சிவானந்தன் தனது 82 ஆவது அகவையில் எழுதிய” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ” எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (18) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவில் இடம்பெற்றது.
இந் நூல் வெளியீட்டு விழா அவரது புத்திரன் பொறியியலாளர் சிவானந்தன் கனகானந்தன் தலைமையில் நடைபெற்றது .
அழைப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன், உதவி பிரதேச செயலாளர் கே. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா நயவுரை நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்விற்கு காரைதீவு கல்முனை பாண்டிருப்பு மண்டூர் போன்ற இடங்களில் இருந்து அவரது உறவினர்கள் அபிமானிகள் மாணவர்கள் என நூற்றுக்கணக்கான ஊர் வருகை தந்திருந்தார்கள்.










