2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.