கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.!
IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக் கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக் கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத் திட்டத்தில் கல்வி நிறுவனத்தின் ஊழியர்களும் மாணவர்களும் சுற்றுச்சூழல் பிரிவு பொலீஸ் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
-ஏ.எஸ்.மெளலானா
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0048-1024x768.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0047-1024x768.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0046-1024x795.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0049-1024x768.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0045-1024x973.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0050-1024x768.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0051-987x1024.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0044-1024x378.jpg)