இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. கலையரசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சி யின் ஆலையடி வேம்பு இணைத் தலைவருமான கவிந்திரன் கோடிஸ்வரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இணைத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் காரைதீவு இலங்கை தமிழரசு கட்சியின்தலைவருமான கி.ஜெயசிறில் இணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் . செயலாளராக திருக்கோவில் தமிழரசுக் கட்சியின் உபசெயலாளரும் ஆசிரியருமான த.தயாபரன் தெரிவு செய்யப்பட்டார். பொத்துவில் தொகுதியின் உப செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை உபசெயலாளருமானசி.சிவகுமார் பொத்துவில்தொகுதியின் உபசெயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும் பொத்துவில் இலங்கை தமிழரசுகட்சியி கிளைத் தலைவருமான சுபோகரன் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் சிரேஷ்ட உறுப்பினர்களாக சோ.பாக்கியராஜ், க.தருமராஜா, அ.கலா நேசன், தே.புனிதன், சி.இராஜகுமார், வே.கேதீஸ்வரன், இ.ஜெகநாதன், க.கோகுலன் ,ஆ.தர்மதாச், க.செல்வ பிரகாஷ் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான 15 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது