உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி

அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

You missed