இரண்டு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில்  13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்,  தம்பிலுவிலில்  இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலையில் )  தரம் 8 இல்  கல்வி கற்கும்  இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு மாணவன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளான்.

இன்று (08) செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார், தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது ,

குறித்த பாடசாலையில் ஒரே வகுப்பில் இருமாணவர்களும் கல்விகற்றுவருகின்றனர் இந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் உயிரிழந்த மாணவன் வகுப்பறை மேசையில் பெயின்றால் கீறியுள்ளார்.

சகமாணவனின் கை அந்த பெயின்றில் பட்டதுடன் கீறப்பட்டு இருந்ததும் அழிந்துவிட்டது. இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  மாணவனை தாக்கிய சக மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117