பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 30.08.2022 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வருகிறது.

ஏழாம் நாளாகிய நாளை அதிகாலை பக்தி பரவசமூட்டும் தீமிதிப்பு நிகழ்வு இடம்பெறும்.

04.08.2022 ஞாயிறு வாழைக்காய் எழுந்துருளப்பண்ணுதல், 05.08.2022 காலை பாற்குடப்பவனி, இன்று 06.08.2022 நோட்பு கட்டுதல், சக்தி மகா யாகம் என்பன இடம் பெற்றன.

இன்று செவ்வாய் இரவு வேல்முருகு அரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.