நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 வீதமானவர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை
எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட
வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கிறார் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானி மூலம் வெளியிடும் பொறுப்பு என்னிடம் உள்ளது.


அதற்கு உங்களின் பெயர்கள் கிடைப்பது மிகவும் முக்கியமானது. பெயர்களைப் பெற்று வர்த்தமானி செய்த பின்னரே, 50 வீதத்துக்கும் குறைவாக வெற்றி பெற்ற உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு தலைவர் அல்லது பிரதித் தலைவர் நியமனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


பெயர்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குய் மாகாண ஆணையாளர்கள் இந்தப் பணியை மேற் கொள்ள வேண்டும்.- என்று மேலும்
தெரிவித்தார்.