அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு
அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை (08.06.2026) கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டு மறைந்த அதிபருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, கல்வித்துறைக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், அவரின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
















