( வி.ரி.சகாதேவராஜி)

வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருக்கோவிலில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த ஊர்தி ஊர்வலம் ஆரம்பமாகியது.

காலை 11. 30 மணியளவில் காரைதீவை அடைந்தபோது அஞ்சலி செலுத்தப்பட்டது. பலரும் கலந்து கொண்டனர்.