செளவியதாசன்

கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகிறது. மீனவர்களது. மீன்பிடி படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன. கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு பெரிய நீலாவணை பொலீசார். மக்களை அறிவுறுத்துவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று கல்முனையில். மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம். சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வெள்ள. நிலையும் தொடர்கிறது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.