பாண்டிருப்பு மேற்கு கிராம மக்கள் இடம்பெயர்வு!
-சௌவியதாசன்-
கல்முனை பாண்டிருப்பு. மகா வித்தியாலயத்துக்கு பின்புறமாக உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருகி வருகிறது. இதனால் இரவோடு இரவாக மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் நெசவு நிலைய வீதியில் உள்ள. மாதர் சங்க கட்டிடத்திற்கும் இரவு பொழுதை கழிப்பதற்காக இடம்பெயர்ந்துள்ளனர்.
அம்பாறை மாவட்த்தில் வெள்ள நிலைமை அதிகரித்துவருவாபல் இந்த மக்கள் அடுத்து சில தினங்கள் தங்கள் குடியிருப்பில் தங்குவது கேள்விக்குறியாகியுள்ளது





