கொழும்பில் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் ஊடகசந்திப்பு
சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களின் ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்
வணக்கம். நாம், இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள். 25 மாவட்டங்களிலும் சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத ஆணையாளர் ஜெனரல் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரை இன்று அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்திருந்தோம். பெண் சுதேச மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரிடம் கலந்துரையாடியதுடன் ஆயுள்வேத ஆணையாளர் அவர்களிடம் சுதேச வைத்தியசாலைகளில் குறைந்தளவு மருத்துவர்களே சேவையை வழங்குகின்றார்கள்; 23.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் சொற்பளவு மருத்துவர்கள் தான் சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலைத்தேய மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாத பல நோய்களை சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தினால் குணப்படுத்த முடியும்.
எமது குறைபாடு எமது சேவையை மட்டுப்படுத்துதல்தான் என தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
கடந்த காலங்களில் வைத்தியப் பற்றாக் குறையின் காரணமாக சில வைத்தியசாலைகள் தமது சேவையினை மட்டுப்படுத்தியிருந்தமை, சிகிச்சைகள், மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டமை ஆணையாளருக்கு எடுத்துக்காட்டப்பட்டது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைசார் பிரச்சனைகளையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணமாக மூன்று பஸ் மாறி ; 40 மைல் தூரம் பிரயாணம் செய்து 65 வயதுள்ள ஒருவரால் வைத்தியம் பார்க்க வருவதில் பல இடர்பாடுகள் இருத்தல போன்ற யதார்த்தமான விடயங்களை ஆணையாளருக்குத் தெரிவித்திருந்தோம்.
ஆணையாளரும் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.
தீர்வாக இலங்கையின் சனத்தொகைக்கேற்ப உட்சேர்த்தலை அதாவது , ஐந்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு வைத்தியரையும் பத்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு C.M.O வைத்தியரையும் நியமிக்க வேண்டும்.
2,587 ஆக அங்கீகரிக்கப்பட்ட ஆளனி இருக்கும் வரையில் எம் மருத்துவம் மாற்றம் காணாது. இத்தொகை 7000 ஆக உயர்த்தப்பட்டு சரியான முகாமைத்துவத் திட்டம் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே பொது மக்களுக்கு சரியான சேவையினை வழங்கலாம் என கூறியதுடன் அக்டோபர் 9ம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளர் “புதிய ஆளனிகளை உருவாக்குதல் தற்பொழுது சாத்தியமில்லை” என குறிப்பிட்டதற்கிணங்க தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் உட்பட அரச வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சித்த ஆயுர்வேத யுனானி மருத்துவர்களுக்கு எதிர்காலமற்ற தன்மைமையை உருவாக்கும்
வலுவான கொள்கையொன்றை வகுக்கப்பட்டு சரியான தீர்வு எட்டப்படாதவரை 5 பீட மாணவர்தொகையை குறைத்து உள்ளீர்க்கக் கோரியிருந்தோம்
2024/07/29ம் திகதியன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து மாணவர் தொகையை குறைத்து உள்வாங்க கோரிய போது நம் நாட்டுக்கு ஆயுர்வேத மருத்துவ தேவை மிக மிக அதிகமாக உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்திடம் சரியான திட்டமிடல் இல்லை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்னென்ன விடயங்களை அபிவிருத்தி செய்ய எண்ணுகிறதோ அதை அவர்களுடனேயே கலந்துரையாடி சிக்கல்கள் ஏதும் இருப்பின் அதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தெளிவாக எடுத்துக்கூறக் கேட்டிருந்தோம்
வெற்றிடமாக உள்ள ஆளணிகளை நிரப்புதல் சாதனை புரிய வழிவகுக்காது என்பதை ஆணையாளருக்கு வலியுறுத்தியதுடன, அரச சேவையிலுள்ள ஒரு வைத்தியரின் நுட்பம் கனிஸ்ட வைத்தியருக்குக் கடத்தப்பட வேண்டுமெனில் முறையான முகாமைத்துவ திட்டம் அவசியமென குறிப்பிட்டிருந்தோம்.
பல சுதேச அரச வைத்தியசாலைகளில் சாதனையான சிகிச்சைகளை வழங்கப்படுகின்றது.
நாம் வைத்தியசாலையுடன் நேரடியான தொடர்பில் இல்லை. இதனால், வைத்தியர்களின் திறமைகள் குறித்த வைத்தியருடன் மாத்திரமே மட்டுப்படுத்தப்படும். பல வருடங்களுக்கு பின்னர் நியமனம் பெறும்போது உண்மையான திறமை மறக்கப்பட்டுவிடும். இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என குறிப்பிட்டிருந்தோம்.
முதியோர்சேவை, தொற்றா நோய், CP, Autism போன்ற நிலமைகளில் பல வெற்றிகளை சுதேச மருத்துவத் துறை பெற்றுள்ளது.
இவற்றை தேசிய கொள்கைகளாக பிரகடனப்படுத்துவது மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டிருந்தோம்.
இலங்கையின் இறப்பு வீதத்தில் 78.4% தொற்றா நோய்களால் ஏற்படுகிறது. எமது மருத்துவ முறைமையை மேம்படுத்துவதன் மூலம் இவ் 74.8 % இறப்பு வீதத்தினை குறைக்கலாம் என குறிப்பிட்டிருந்தோம்.
இலங்கையின் படைவீரர்களுக்கு, குறிப்பாக Police, Army, Navy போன்ற வீரர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வீதம் 30 – 40% வரையாக இருப்பதாக நாங்கள் அறியப் பெற்றிருந்தோம். எனவே அப்படியான நோய் நிலைமைகளை குறைக்க எமது மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.
மலைநாட்டில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ சேவைகள் ஏனைய இடங்களை போல் வழங்கப்படுவதில்லை. ஆகவே மலைநாட்டு மக்களுக்கும் சேவை பெறுதலை உறுதிப்படுத்தி விஸ்தரிக்க வேண்டும், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவம் பெரும் பங்கு வகிக்கும்.
இவ் மருத்துவ முறைகளை முறைவர பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் டொலர் செலவினங்களை குறைக்கலாம்.
தற்போது சிறுநீரகம் சார்ந்த பிரச்சறைகள் அதிகரித்து வருகிறன. ஆகவே மதவாச்சி சிறுநீரக ஆயுள்வேத வைத்தியசாலையை விரிவாக்கம் செய்யலாம்.
இம் மருத்துவ முறை போல இருதய நோய்களில்கூட பல சாதனையான சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. ஆகவே இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்
48 திட்டங்களை உள்ளடக்கிய திட்டமுன்மொழிவுகளை முதற்கட்டமாக வழங்கியதுடன் முதற்கட்டமாக நாங்கள் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்டுத்தினாலே தற்போது எம் சமூகத்திலுள்ள பல நோய் நிலமைகளுக்கு தீர்வுகாணலாம்.
இவ்வாறு தீர்வுகாண்பதன் மூலம் எதிர்காலத்தில் வேலை இல்லை என்கிற பிரச்சனை வராது என குறிப்பிட்டதுடன் 2035ம் ஆண்டளவில் இலங்கையின் சுதேச மருத்துவத்தை உலகின் சிறந்த இடத்துக்குக் கொண்டுவர முடியும். அதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றோம் என இன்று 2025/11/25 மகளிர் விவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகசந்திப்பை சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் வழங்கியிருந்தார்கள்
