சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச்சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம்!

பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்..!

டாக்டர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உருமாறியிருக்கும் டாக்டர் ஞானசெல்வத்திற்கு “குயீன் புக்” எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருதைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது.

தற்போது இவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

இவருடைய சேவை தொடர பாராட்டி வாழ்த்துவோம்.!
எமது ஊர் என்பதால் பெருமை கொள்கிறோம்..!

-பா.அரியநேத்திரன்-
19/06/2025