எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது எடுக்கப்படவுள்ளது.