( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள பழமையான பந்தலை புதுப்பிக்கும் விழா, (20. 07.2026) திங்கள் சிறப்பாக நடைபெற்றது.
கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவின் தலைமையிலும், ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பிரதம காப்பு துரந்தரரான சரத் செபால டி. ரத்நாயக்கவின் வழிகாட்டுதலிலும்,
சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதான ஊர்வலத்தில் செல்லும் யானைகளின் பங்களிப்புடன், மாணிக்க கங்கையிலிருந்து பச்சைகொத்துப்பந்தத்தைக் கழுவிச் சுத்தம் செய்து மீண்டும் அமைக்கப்பட்டது.
இன்று புதுப்பிக்கப்பட்ட இந்த கொத்து பந்தல், அடுத்த ஆண்டு எசல பெரஹேராவின் ஆறாம் நாளில் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.







