நாவிதன்வெளி 7ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சா. ருக்மாங்கதன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் போது புதிய மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் நாமகள் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மு.இராஜகோபால் கலந்து சிறப்பித்திருந்தார்.