அரசு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கும் சேவைக்கும் அத்தியாவசியமான பணியாளர்களை பணிக்கு அழைக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தொழிலுக்கு வரக்கூடியவர்கள் இந்த சுற்றுனிருபத்தை காரணம் காட்டி பணிக்கு வராமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும்,

ஆகவே முறையான ரீதியில் அலுவலகங்களில் கடமைகளை முன்னெடுப்பதற்கு இந்த சுற்றுநிருபம் தடங்கலாக இருக்காதுவென அரச நிர்வாக உள்நாட்டு அலுவலக மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது